நாட்டுப்புறப்பாடல் பாடி வாக்கு சேகரிக்கும் காங். வேட்பாளர் - சமூக வலைதளங்களில் பாடலை பகிர்ந்து ராகுல்காந்தி பாராட்டு

மத்தியபிரதேச மாநிலம், தேவாஸ் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீ ப்ரஹலாத் திபானியா, நாட்டுப்புற பாடலை பாடி, வாக்கு சேகரித்து வருவதை வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நாட்டுப்புறப்பாடல் பாடி வாக்கு சேகரிக்கும் காங். வேட்பாளர் - சமூக வலைதளங்களில் பாடலை பகிர்ந்து ராகுல்காந்தி பாராட்டு
x
ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், நாட்டுப்புற பாடல்களை தம்புரா, வயலின், டோலக் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தபடி பாடுவதில் வல்லவராக திகழ்கிறார். நாட்டுப்புற இசைக்கலைஞரான இவர், தேவாஸ் மக்களவை தொகுதியில் வாக்குசேகரிக்கும் பாடி, பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இது குறித்து, சமூகவலைத்தளத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். அவர் தமது பதிவில், ப்ரஹலாத் திபானியாவின் வாக்குசேகரிக்கும் காட்சி, இசை விருந்தாக அமைந்துள்ளதாக கூறி, அவர் பாடிய பாடலையும் பகிர்ந்துள்ளார்.இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்