"விமானம் புறப்பட 3 மணிநேரத்துக்கு முன்பு 40% தள்ளுபடி" - ஏர் இந்தியா முடிவு

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, கடைசி நேர தள்ளுபடி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் புறப்பட 3 மணிநேரத்துக்கு முன்பு 40% தள்ளுபடி - ஏர் இந்தியா முடிவு
x
பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, கடைசி நேர தள்ளுபடி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விமானம் புறப்படுவதற்கு 3 மணிநேரத்துக்கு முன்பு காலியாக உள்ள இருக்கைகளுக்கான டிக்கெட்டை பெரும் தள்ளுபடி கட்டணத்தில் விற்பனை செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, உள்நாட்டு விமானங்களில் மட்டுமே தள்ளுபடி வழங்க திட்டமிட்டுள்ள ஏர் இந்தியா, விமானம் புறப்படுவதற்கு 3 மணிநேரத்துக்கு முன்பு புக்கிங் செய்வோருக்கு 40 சதவீதத்குக்கும் அதிகமான தள்ளுபடி வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், காலியாக விமானங்கள் பறப்பதை தவிர்த்து, வருவாயை அதிகரிக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்