வெடிகுண்டை விட சக்திவாய்ந்தது வாக்கு - நரேந்திர மோடி

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெடிகுண்டுவை விட சக்தி வாய்ந்தது நமது வாக்குகள் என தெரிவித்தார்.
வெடிகுண்டை விட சக்திவாய்ந்தது வாக்கு - நரேந்திர மோடி
x
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெடிகுண்டுவை விட சக்தி வாய்ந்தது நமது வாக்குகள் என தெரிவித்தார். தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்த மோடி, கும்பமேளாவில் புனித நீராடிய பின்னர் கிடைக்கும் புனித தன்மையை, ஜனநாயக திருவிழாவான தேர்தலில் வாக்களித்த பின்னர் ஒருவரால் அனுபவிக்க முடியும் என தெரிவித்தார்.  தீவிரவாதத்துக்கு ஆயுதம் வெடிகுண்டு என்றும், ஜனநாயகத்துக்கு பலம் வாக்குகள் என்றும் மோடி தெரிவித்தார். வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது நமது வாக்குகள் என  தாம் உறுதியாக நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நமது வாக்குகளின் பலத்தை புரிந்து கொள்ள முன்வர வேண்டும் என வாக்காளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்