கேரளாவில் ஏப்.23-ல் மக்களவை தேர்தல் : 219 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

கேரளாவில் வரும் 23ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது.
கேரளாவில் ஏப்.23-ல் மக்களவை தேர்தல் : 219 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு
x
கேரளாவில் வரும் 23ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. இதுதொடர்பாக அம்மாநில தலைமை தேர்தல் ஆணையர் டிக்காராம் மீனா, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேரளாவில் மொத்தம் 2 கோடியே 61 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கூறினார். அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் மலப்புரம் மக்களவை தொகுதியிலும், குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வயநாடு தொகுதியிலும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாவோயிஸ்ட்களால் பிரச்னை எழுவதற்கு வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்ட 219 வாக்குச்சாவடிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்