பிச்சைக்காரர்கள், பாம்பு வித்தை காட்டுவோர் வசிக்கும் கிராமம் - அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
சாலை, மின்சாரம், உள்பட எந்த வசதியும் இன்றி தவிப்பு
உத்தரபிரதேசத்தில் நாக்லா தர்பாரி என்ற ஒரு கிராமம் உள்ளது. இங்கு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகிறவர்களும், பாம்பு வைத்து வித்தை காட்டி பிழைப்பு நடத்துகிறவர்களும் வசிக்கின்றனர்.இந்நிலையில், தங்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அந்த கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் 3 முறை வெற்றி பெற்ற மெயின்புரி தொகுதிக்குட்பட்ட கிராமமாக இருந்தும், இன்னமும் அடிப்படை வசதிகள் இன்றி தாங்கள் சிரமப்படுவதாக அவர்கள் குமுறுகின்றனர். அந்த கிராமத்தில், குழந்தைகள் உட்பட அனைவரும் கொடிய பாம்புகளுடன் வசித்து வருகின்றனர்.
Next Story