அழும் பெண்ணுக்கு அரவணைத்து ஆறுதல் கூறும் குரங்கு...சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
அழுது கொண்டிருந்த பெண் ஒருவரை மனிதர்களை போலவே குரங்கு ஒன்று அரவணைத்து ஆறுதல் கூறிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகாவின் நர்குந்த் நகரில், 80 வயது முதியவர் ஒருவர் இறந்ததை அடுத்து அங்கு பெண்கள் உள்பட அனைவரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த ஒரு குரங்கு, அழுது கொண்டிருந்த பெண் ஒருவரை மனிதர்களை போலவே அரவணைத்து ஆறுதல் கூறிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அனுமந் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story