கவனக்குறைவால் பா.ஜ.க.விற்கு வாக்களித்த இளைஞர் : ஆத்திரத்தில் தன் விரலை வெட்டி கொண்ட கொடூரம்

உத்தரபிரதேசத்தில் கவனக்குறைவால் பா.ஜ.கவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் தன் விரலை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கவனக்குறைவால் பா.ஜ.க.விற்கு வாக்களித்த இளைஞர் : ஆத்திரத்தில் தன் விரலை வெட்டி கொண்ட கொடூரம்
x
உத்தரபிரதேசத்தில் கவனக்குறைவால் பா.ஜ.கவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் தன் விரலை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சஹர் பகுதியை சேர்ந்த பவன்குமார், பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் பதற்றத்தில் தவறுதலாக பா.ஜ.கவிற்கு அவர் தனது வாக்கை பதிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், கடும் மன உலைச்சலில் இருந்த பவன்குமார், திடீரென வீட்டில் இருந்த கத்தியால் மை வைக்கப்பட்ட விரலை வெட்டியுள்ளார். கையில் வெட்டு காயத்துடன் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

Next Story

மேலும் செய்திகள்