மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் வந்த இளைஞர்
படுத்தபடியே வாக்களித்து ஜனநாயக கடமை நிறைவேற்றம்
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் மருத்துவ சிகிச்சையில் இருந்த இளைஞர், ஆம்புலன்ஸ் மூலம் வந்து படுத்தபடியே வாக்களித்தார்.அங்குள்ள சோப்பூர் கிராமத்தை சேர்ந்த அஜய் பூஜாரி என்ற இளைஞர் சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்காக செவிலியர்கள் உதவியுடன், அவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுத்தபடியே வாக்குச்சாவடிக்கு வந்தார். சிகிச்சையில் உள்ள நிலையிலும், அஜய் படுத்தபடியே வாக்களித்தது, அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
Next Story