ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர வசந்த உற்சவம் : இன்று தங்கத்தேரில் மலையப்ப சுவாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் தொடங்கியது.
ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர வசந்த உற்சவம் : இன்று தங்கத்தேரில் மலையப்ப சுவாமி வீதி உலா
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த விழாவில், முதல் நாளான நேற்று மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இரண்டாவது நாளான இன்று தங்கரதத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். வசந்த உற்சவத்தையொட்டி, வசந்த மண்டபத்தில் செயற்கை வன அலங்காரம் இடம் பெற்றிருந்தது. வசந்த உற்சவத்தையொட்டி, கோவிலில் நடைபெறும் பல ஆர்ஜித சேவைகளை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்