ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் காட்டுத் தீ - பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் சேதம்

திருமலையில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள், மரங்கள் எரிந்து நாசமாயின
ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் காட்டுத் தீ - பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் சேதம்
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதை யாத்திரையாக செல்லும் வழியான ஸ்ரீவாரி மெட்டு வனப்பகுதியில் காலை முதலில் இருந்தே காட்டுத்தீ பரவி வருகிறது.இங்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத காரணத்தினால் தீயை அணைக்க வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் வனப்பகுதி எரிந்து வருகிறது.இதில் அரிய வகை மரங்களும் மூலிகைச் செடிகளும் தீக்கிரையாகி வருகின்றன அதேபோல்  பக்தர்கள் செல்லக்கூடிய நடை பாதை அருகே தீ பரவாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்