தட்டாஞ்சாவடியில் திடீரென களமிறங்கிய புதுமுகம் : முன் அறிவிப்பு இன்றி திடீர் வேட்புமனு தாக்கல்

தட்டாஞ்சாவடி தொகுதியின் வேட்பாளராக,தனது சகோதரியின் மகனான நெடுஞ்செழியனை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி களமிறக்கியுள்ளார்
தட்டாஞ்சாவடியில் திடீரென களமிறங்கிய புதுமுகம் : முன் அறிவிப்பு இன்றி திடீர் வேட்புமனு தாக்கல்
x
புதுச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக,  தனது சகோதரியின் மகனான நெடுஞ்செழியனை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி களமிறக்கியுள்ளார்.கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இன்று ரங்கசாமி முன்னிலையில்,நெடுஞ்செழியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.வேட்பு மனு தாக்கலின்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தனும் உடனிருந்தார்.கட்சி தலைமை வேட்பாளரை முறையாக அறிவிக்காமல், திடீரென வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம்,புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்