கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

கண்காணிப்பு கேமிராவின் உதவியால் துரித நடவடிக்கை
கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு
x
திருப்பதி திருமலையில் கடத்தப்பட்ட மூன்று மாத ஆண் குழந்தையை, 24 மணி  நேரத்தில் போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.திருமலைக்கு வந்த பக்தர்களான மகாவீரர் மற்றும் கெளசல்யா தம்பதியினர், தங்கள் குழந்தையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருந்தனர்.அப்போது கண்காணிப்பு கேமிராவில் பெண் ஒருவர் குழந்தையை கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் திருப்பதி அடுத்த மங்கலம் என்னுமிடத்தில் கடத்தலில் ஈடுபட்ட அந்த பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்

Next Story

மேலும் செய்திகள்