கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவு : பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி
மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று மனோகர் பாரிக்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை மனோகர் பாரிக்கரின் உடலுக்கு, முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.
Next Story