திருமலை ஏழுமலையான் கோவில் தெப்போற்சவம்...

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
திருமலை ஏழுமலையான் கோவில் தெப்போற்சவம்...
x
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் சாமி புஷ்கரணி தெப்பக்குளத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி சீதாதேவி, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் சமேதராக ராமர் அலங்காரத்தில் எழுந்தருளினார். குளத்தில் தெப்பம் தொடர்ந்து மூன்று சுற்றுகளாக வலம் வந்தது. அப்போது நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா  என்று கோஷம் எழுப்பி வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்