சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு : பங்குனி உத்திர திருவிழா - நாளை மறுநாள் கொடியேற்றம்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்பட இருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு : பங்குனி உத்திர திருவிழா - நாளை மறுநாள் கொடியேற்றம்
x
நாளை மாலை 5 மணியளவில், நம்பூதிரியால் கோயில் நடை திறக்கப்படுகிறது. நாளை வேறு எந்த பூஜையும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் காலை 7.30 மணியளவில் திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. தொடர்ந்து 21ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன், தினமும் அதிகாலை 4.30 மணி முதல் காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். நாளை காலை 10 மணிக்கு பிறகு தான், நிலக்கலில் இருந்து சபரிமலை செல்ல  பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Next Story

மேலும் செய்திகள்