புதுச்சேரி முழுவதும் 452 போலியோ சொட்டு மருந்து முகாம் : முகாமை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி முழுவதும் 452 போலியோ சொட்டு மருந்து முகாம் : முகாமை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் நாராயணசாமி
x
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். மாநிலத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட 91 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் மொத்தம் 452 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் பள்ளியில் சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்தார். சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்