உணவகங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் : சட்டவிரோதமாக விற்று வந்த 2 பேர் கைது

புதுச்சேரியில் உள்ள சில உணவகங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
உணவகங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் : சட்டவிரோதமாக விற்று வந்த 2 பேர் கைது
x
புதுச்சேரியில் உள்ள சில உணவகங்களில்  வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு  போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் சட்ட விரோதமாக சிலிண்டர்களை விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  25  வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்