பண மோசடி விவகாரம் தொடர்பான வழக்கு : நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை

பண மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்காவை கைது செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பண மோசடி விவகாரம் தொடர்பான வழக்கு : நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை
x
பண மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்காவை  கைது செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக லிங்கா படத்தில் நடித்துள்ள இந்தி நடிகை சோனாக்‌ஷிக்கு 37 லட்ச ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகவும்,  அவர் பங்கேற்காததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி பிரமோத் ஷர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார்.  இது தொடர்பாக சோனாக்‌ஷி உள்ளிட்ட 4 பேர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நடிகை சோனாக்‌ஷி சின்காவை கைது செய்ய தடை விதித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சோனாக்‌ஷிக்கு உத்தரவிட்டுள்ளது. தன் மீதான புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சோனாக்‌ஷியின் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

Next Story

மேலும் செய்திகள்