பெங்களூரு : சர்வதேச விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து

பெங்களூருவில் விமான கண்காட்சி அருகே ஏற்பட்ட தீ விபத்தில்,15 கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
x
பெங்களூரு எலகங்கா விமான நிலையத்தில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சியை இன்றும் நாளையும் பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டது. இதற்காக விமான நிலையத்திற்கு வந்த பொதுமக்கள், தங்கள் வாகனங்களை வெளியே நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது  திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருப்பதால் அந்த இடமே கரும்புகை சூழ்ந்து காட்சியளித்தது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்