தூக்கு போடும் போராட்டம் : ஆம் ஆத்மி கட்சி நிர்வாகியால் பரபரப்பு
புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவர் தூக்குப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவர் தூக்குப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 100 அடி சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி,ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி, சுத்தம் சுந்தரராஜன் தூக்குப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story