ரஃபேல் தீர்ப்பு - மறுசீராய்வு மனுவை விசாரிக்க கோரிக்கை

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
ரஃபேல் தீர்ப்பு - மறுசீராய்வு மனுவை விசாரிக்க கோரிக்கை
x
ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ளுமாறு உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இன்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், விரைவில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்