காளஹஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு - திருடர்களை துரத்தி பிடித்த நிகழ்வை நினைவு கூரும் விழா

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள காளஹஸ்தி கோவிலில் தொண்டைமான் சக்கரவர்த்தி, திருடர்களை துரத்தி பிடித்த நிகழ்வை நினைவு கூரும் திருவிழா நடைபெற்றது.
காளஹஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு - திருடர்களை துரத்தி பிடித்த நிகழ்வை நினைவு கூரும் விழா
x
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள காளஹஸ்தி கோவிலில் தொண்டைமான் சக்கரவர்த்தி, திருடர்களை துரத்தி பிடித்த நிகழ்வை நினைவு கூரும் திருவிழா நடைபெற்றது. தொண்டைமான் சக்கரவர்த்தி இந்த பகுதியை ஆண்டபோது, கோவிலில் இருந்த விலை உயர்ந்த நகைகளை திருடர்கள் கொள்ளையடித்த‌தாக கூறப்படுகிறது. இதனையடுத்து தொண்டைமான் சக்கரவர்த்தி மாறு வேடத்தில் சென்று திருடர்களை துரத்தி பிடித்துள்ளார். இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக சுவாமி திருடர்களை துரத்திபிடிப்பது போல அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்