கடன் தொல்லையால் காவலர் தூக்குப் போட்டு தற்கொலை

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில், கடன் தொல்லையால் காவலர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடன் தொல்லையால் காவலர் தூக்குப் போட்டு தற்கொலை
x
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில், கடன் தொல்லையால் காவலர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த ஆயுதப்படைப் பிரிவு காவலர் சுரேஷ், கடந்த 2014 ஆண்டு ஏலச்சீட்டு மோசடியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம்   இடையன்சாவடி சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு மரத்தில், சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  சுரேஷுக்கு கடன் நெருக்கடி இருந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்