இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல் : உயிர் தப்பிய இரு விமானிகள் - ஒருவர் பலி

பெ​ங்களூரூவில், இந்திய விமானப்படை சார்பில் நடைப்பெற்ற ஒத்திகை நிகழ்ச்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு விமானி உயிரிழந்தார்.
இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல் : உயிர் தப்பிய இரு விமானிகள் - ஒருவர் பலி
x
பெங்களுரூவில் நாளை, சர்வதேச விமான கண்காட்சி துவங்க உள்ளது. இந்த கண்காட்சியில் சாகசங்கள் செய்வதற்காக, விமானங்கள், ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன.  அப்போது எலெங்கா விமானப்படைத்தளத்தில், எதிர்பாராத விதமாக இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி தரையில் விழுந்தது. அப்போது விமானிகள், 2 பேர், கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மூன்றாவது விமானி காந்தி என்பவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்