ஒரே இடத்தில் 262 ஜோடிகளுக்கு திருமணம்
குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட திருமண விழாவில் திரட்டப்பட்ட நிதி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சூரத்தில் உள்ள செளராஷ்டிரா பட்டேல் சேவ சங்கம் சார்பில் ஒரே இடத்தில் 262 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. ஒரே இடத்தில் நடத்தப்பட்ட திருமணங்கள் மூலம் 50 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அது, உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
Next Story