இந்தியாவிலேயே தயாரான முதல் விரைவு ரயில் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட "வந்தே பாரத்" விரைவு ரயிலை டெல்லி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
டெல்லியில் இருந்து வாரணாசிக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று இந்த விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் இந்தியாவின் முதல் அதிவிரைவு ரயில் என்ற பெருமையை பெற்றுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ். போன்ற பல நவீன வசதிகள் உள்ள இதில், ஒரே நேரத்தில் ஆயிரத்து 128 பேர் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story