காஷ்மீர் தாக்குதலில் தமிழக வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழக ராணுவ வீரர் உயிரிழந்தார்
காஷ்மீர் தாக்குதலில் தமிழக வீரர் பலி
x
கோவில்பட்டியை அடுத்த சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவரது மகன் சுப்பிரமணியன், இந்த தாக்குதலில் இறந்தவர் ஆவார். திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் சுப்பிரமணியன்- கிருஷ்ணவேணி தம்பதிக்கு குழந்தை இல்லை என தெரிகிறது. விடுமுறைக்காக ஊருக்கு வந்த சுப்பிரமணியன், கடந்த ஞாயிறுக்கிழமை தான் பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், அவர் இறந்து செய்தி சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு பேரிடியாய் விழுந்துள்ளது. சுப்பிரமணி இறப்பு குறித்து முறைப்படி தகவல் அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்