"மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்" - முலாயம் சிங்

தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என, சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரான முலாயம் சிங் யாதவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - முலாயம் சிங்
x
தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என, சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரான முலாயம் சிங் யாதவ் விருப்பம் தெரிவித்துள்ளார். 16 வது மக்களவையின் நிறைவு நாளில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடி, அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல முயற்சி மேற்கொண்டதாக புகழாரம் சூட்டினார். இதையடுத்து, முலாயம் சிங்கின் ஆசீர்வாதத்துக்கு நன்றி தெரிவிப்பதாக மோடி கூறினார். பாஜகவை முழு மூச்சாக எதிர்ப்பதற்காக, மாயாவதியுடன் முலாயமின் மகன் அகிலேஷ் செயல்பட்டு வரும் நிலையில், மோடியை முலாயம் பாராட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்