பட்டங்களை பறக்க விட்டு காங்கிரஸார் போராட்டம்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் பட்டங்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டங்களை பறக்க விட்டு காங்கிரஸார் போராட்டம்
x
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான  சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது, ரபேல்  போர் விமானம் போன்ற பட்டங்களை பறக்கவிட்டு, எதிர்ப்பை தெரிவித்தனர். பட்டத்தில் மோடி மற்றும் அனில் அம்பானியின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தப் போராட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்