எம்.எல்.ஏ மகனிடம் பேரம் பேசிய ஆடியோ விவகாரம் : சிறப்பு விசாரணை நடத்த சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு

கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பிய ஆடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த அம்மாநில அரசுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
எம்.எல்.ஏ மகனிடம் பேரம் பேசிய ஆடியோ விவகாரம் : சிறப்பு விசாரணை நடத்த சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு
x
கர்நாடகா சட்டமன்றத்தின் 5-வது நாள் கூட்டத்தில், பேரம் பேசும் ஆடியோ விவகாரம் புயலை கிளப்பியது. இது குறித்து பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், மாற்று கட்சியினரை இழுக்கும் விவகாரத்தில், தேவையில்லாமல் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். களங்கத்தை துடைத்தெறிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த மாநில அரசுக்கு அவர் உத்தரவிட்டார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றால்,வழக்கறிஞர்களின் கேள்விகளால் நூறு முறை பலாத்காரம் செய்யப்படுவது போல்  தனது நிலை இருப்பதாக, சபாநாயகர் ரமேஷ்குமார் வேதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்