எருதாட்ட விழாவில் சீறி பாய்ந்த காளைகள்

ஒசூர் அருகே உத்தனப்பள்ளி கிராமத்தில் ஊர்பொதுமக்கள் சார்பில் எருதாட்ட விழா நடைபெற்றது.
எருதாட்ட விழாவில் சீறி பாய்ந்த காளைகள்
x
ஒசூர் அருகே உத்தனப்பள்ளி கிராமத்தில் ஊர்பொதுமக்கள் சார்பில் எருதாட்ட விழா நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளின் கொம்புகளில் பரிசுப்பொருட்களும், அலங்கார தடுக்குகளும் கட்டப்பட்டிருந்தன. சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் இளைஞர்கள் பிடித்து அடக்கி பரிசுகளை பறித்து சென்றனர்.  முன்னதாக இரண்டு காளைகள் நேருக்கு நேர்க்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு காளை உயிரிழந்தது.  மேலும் சீறிப்பாய்ந்து  ஒடிய இராயக்கோட்டை பகுதியை சேர்ந்த மற்றொரு காளை தவறி விழுந்து உயிரிழந்தது.


Next Story

மேலும் செய்திகள்