சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு : பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில், இன்று நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு : பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்
x
மாசிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில், இன்று நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி,  மாலை 5 மணிக்கு கோயில் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 17-ந்தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படும். மாசி மாத பூஜையின் போதும் இளம்பெண் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல், நடைப்பந்தல் போன்ற பகுதிகளில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்