"ஆட்சி அமைக்காமல் ஓய மாட்டோம் என உறுதி" - ராகுல்காந்தி
திறந்தவெளி வாகனத்தில் ராகுல்காந்தி பிரசாரம்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பிரமாண்ட ஊர்வலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மாநில கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலம் நாட்டின் மையமான பகுதி என்றும், நிச்சயம் நாங்கள் எங்கள் இலக்கை இங்கே எட்டுவோம் என்றார். காங்கிரஸ் ஆட்சியமைக்காமல் நாங்கள் ஓய மாட்டோம் என்றும் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.
Next Story