மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு திட்டம் என ஸ்டிக்கர்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது பிரதமர் சரமாரி புகார்
மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு திட்டம் என ஸ்டிக்கர்
x
ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினத்தில், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றிற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் குண்டூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கடுமையாக குற்றஞ்சாட்டினார். கட்சி மாறுவதிலும், புதிய கூட்டணியை உருவாக்குவதிலும், தேர்தலில் அடுத்தடுத்து தோல்வியை தழுவுவதிலும் சந்திரபாபு நாயுடு, முன்னணியில் உள்ளதாக பிரதமர் மோடி புகார் தெரிவித்தார். மக்களின் வரிப்பணத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு சுரண்டி வருவதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். தனது மாமனார் என்.டி.ராமராவின் முதுகில் குத்தி துரோகம் செய்தவர் சந்திரபாபு நாயுடு எனவும் மோடி கடுமையாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்