ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக விசாரணை : அமலாக்க துறையில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் இன்று கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக விசாரணை : அமலாக்க துறையில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்
x
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் இன்று கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் அமலாக்க துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு சட்டத்துக்கு புறம்பாக ரூ. 300 கோடி வெளிநாட்டு முதலீடு பெற்று தந்ததாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு தொடர்ந்துள்ள அமலாக்க துறை, விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதன் பேரில், டெல்லி அமலாக்க துறை அலுவலகத்துக்கு வந்த கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்