உலக நன்மை வேண்டி அகோரிகள் வழிபாடு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளாவில் மண்டை ஓடு மாலை அணிந்து திருச்சி பகுதியை சேர்ந்த அகோரி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார்.
உலக நன்மை வேண்டி அகோரிகள் வழிபாடு
x
பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்த அகோரி மணிகண்டன் தனக்கென ஒதுக்கப்பட்ட கூடாரத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்து மந்திரங்கள் உச்சரித்து மகா யாக குண்டத்தில் நவதானியங்கள், பழங்களை போட்டு வேள்வி நடத்தினார்.  யாகத்தின் இறுதியில் அகோரிகள் உடுக்கை அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும், ஹர ஹர மகாதேவா என்று கோஷம் எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்