விபத்தில் சிக்கிய காரில் செம்மரக்கட்டைகள் : தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு
சித்தூர் மாவட்டம் தவனம் பள்ளி அருகே, விபத்தில் சிக்கிய காரில் இருந்து செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, விவசாய நிலத்திற்குள் பாய்ந்த அந்த காரை, போலீசார் சோதனை செய்தபோது, அதில் செம்மரக்கட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தமிழக பதிவெண் கொண்ட அந்த காரில் வந்தவர்கள், தப்பியோடி விட்ட நிலையில், அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 10 லட்ச ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story