காந்தி உருவ பொம்மையை சுட்ட சம்பவம் : இந்து மகாசபை தலைவர், அவரின் கணவர் கைது

உத்தர பிரதேசத்தில் காந்தியின் நினைவு நாளன்று, காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, காந்தியின் உருவப்பொம்மையை சிலர் எரித்தனர்.
காந்தி உருவ பொம்மையை சுட்ட சம்பவம் : இந்து மகாசபை தலைவர், அவரின் கணவர் கைது
x
உத்தர பிரதேசத்தில் காந்தியின் நினைவு நாளன்று, காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, காந்தியின் உருவப்பொம்மையை சிலர் எரித்தனர். அப்போது காந்தி உருவப்பொம்மையை துப்பாக்கியால் ஒரு பெண் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் இந்து மகா சபை தலைவர் பூஜா பாண்டே என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடன், உடந்தையாக இருந்த அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்