அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் : தொண்டர்களுக்கு மோகன் பகவத் வேண்டுகோள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் இந்து ஆன்மீகவாதிகள் சில மாதங்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் : தொண்டர்களுக்கு மோகன் பகவத் வேண்டுகோள்
x
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் இந்து ஆன்மீகவாதிகள்  சில மாதங்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்ப மேளாவுக்கு சென்ற அவர் மடாதிபதிகளை சந்தித்து பேசினார். பின்னர்  விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்களிடையே பேசிய மோகன் பகவத், ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று கூறினார். ராமர் கோவில் விவகாரத்தால் நாட்டில் பிரச்சனை எதுவும் ஏற்படக்கூடாது என்று கூறிய அவர், இதில் ஆர்எஸ்எஸ் தீர்க்கமாக உள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்