ரூ.3 கோடி மதிப்பில் செம்மர​ம் கடத்திய 3 பேர் கைது

5642 கிலோ எடையிலான செம்மர கட்டைகள் பறிமுதல்
ரூ.3 கோடி மதிப்பில் செம்மர​ம் கடத்திய 3 பேர் கைது
x
ஆந்திர மாநிலம் , ஏலுர் அருகே 3 கோடி மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்து கடப்பாவை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கடப்பா மாவட்ட ஏடிஎஸ்பி லக்ஷ்மி நாராயணா செய்தியாளர்களிடம் பேசிய போது, 
ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதாகவும், அதில், 5 ஆயிரத்து 642 கிலோ எடை கொண்ட 175 செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறினார். மேலும் இது தொடர்பாக, மகேந்திர் ரெட்டி, பிரதாப், ஷேக் ஷா வலீ ஆகியோரை கைது செய்துள்ளதாக, அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்