மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் விவகாரம் - டெல்லி போலீசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஊடுருவியதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறைக்கு, இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் விவகாரம் - டெல்லி போலீசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
x
இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஊடுருவியதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறைக்கு, இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.  நேற்று லண்டனில் செய்தியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில்  பேசிய அமெரிக்க வாழ் இந்தியரான சையத் சூஜா என்பவர், 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய மின்னணு கழகத்தில் பணியாற்றிய போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஊடுருவியதாக தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதனிடையே, சையத் சூஜா, தங்கள் நிறுவனத்தில் நிரந்தரமாகவோ அல்லது வேறு வகையிலோ தொடர்பில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என இந்திய மின்னணு கழகம் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்