மம்தா நடத்தும் பிரம்மாண்ட பேரணி : இன்று மாநில கட்சி தலைவர்கள் கூட்டம்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி இன்று நடைபெற உள்ளது.
மம்தா நடத்தும் பிரம்மாண்ட பேரணி : இன்று மாநில கட்சி தலைவர்கள் கூட்டம்
x
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி இன்று நடைபெற உள்ளது. பா.ஜ.க-வுக்கு எதிராக,  நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கூடுமாறு,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, இன்று கொல்கத்தாவில் நடைபெறும் பேரணியில்  பங்கேற்க தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கொல்கத்தா சென்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்