பேராயர் பிராங்கோ மீது பாலியல் புகார்

கேரளாவில், பாலியல் புகாரில் சிக்கிய பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பேராயர் பிராங்கோ மீது பாலியல் புகார்
x
கேரளாவில், பாலியல் புகாரில் சிக்கிய பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற  வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதையடுத்து, பிராங்கோ கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியேவுள்ளார்.

இந்த நிலையில், பிராங்கோவுக்கு  எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் அனைவரும், கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற வேண்டும் என இயேசு திருச்சபையின் தலைவர் ரெஜினா உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாஸ்திரிகள் வெவ்வெறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. போராட்டத்தை தொடங்கிய கன்னியாஸ்திரி மட்டும் கான்வென்ட்டை விட்டு வெளியேற்றப்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்