ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம்

சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் மற்றும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம்
x
சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் மற்றும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

2019 நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாக நடத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையமும் எடுத்து வருகிறது.  இந்த நிலையில், சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், தாசில்தார் முதல் மாவட்ட ஆட்சியர் வரையிலும், காவல்துறையில் துணை ஆய்வாளர் முதல் ஐஜி வரையிலும் இது பொருந்தும் என தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்