இறந்த தாயின் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன் : சாதியை காரணம் காட்டி உதவிக்கு யாரும் வராத சோகம்

ஒடிசாவில் சாதியை காரணம் காட்டி உதவிக்கு யாரும் முன்வராததால் இறந்த தாயின் உடலை சைக்கிளில் வைத்து இடுகாட்டுக்கு மகன் எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இறந்த தாயின் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன் : சாதியை காரணம் காட்டி உதவிக்கு யாரும் வராத சோகம்
x
ஒடிசாவின் கர்ப்பாபஹல் கிராமத்தில் தன் தாயுடன் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் தாய் இறந்ததை அடுத்து, அவரை நல்லடக்கம் செய்ய அக்கம்பக்கத்தினரை அணுகி உள்ளார். ஆனால்,  சாதியை காரணம் காட்டி உதவிக்கு அவர்கள் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, தனது சைக்கிளின் பின்புறத்தில் தாயின் உடலை வைத்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு எடுத்து சென்ற மகன், அருகிலிருந்த வனப்பகுதியில் அவரை நல்லடக்கம் செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. அதில் அந்த சாலையில் பலர் இரக்கமற்ற வகையில் வாகனங்களில் கடந்து செல்லும் அவலத்தையும் காண முடிகிறது.

Next Story

மேலும் செய்திகள்