4 ஆண்டுகளாக பெண்களை குறிவைத்து கொல்லும் கொடூரன்

புதுச்சேரியில் சித்த மருத்துவரை கழுத்தறுத்து கொல்ல முயன்ற வழக்கில் கைதான குற்றவாளியை விசாரித்த போது, நான்கு ஆண்டுகளாக மேலும் சில பெண்களை கழுத்த‌றுத்து கொன்றது தெரிய வந்துள்ளது.
4 ஆண்டுகளாக பெண்களை குறிவைத்து கொல்லும் கொடூரன்
x
புதுச்சேரி வில்லியனூர் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த சித்தமருத்துவர் தமிழ்ச்செல்வி, அவரது கிளினிக்கில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். அவரது நகைகள் திருடப்பட்டிருந்தன. தமிழ்ச்செல்வி கொடுத்த தகவலின் படி, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கைது செய்த போலீசார், 
விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், பெண்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடிப்பதையே ஆறுமுகம் வழக்கமாக கொண்டிருப்பதை தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு முத்தியால் பேட்டையை சேர்ந்த கலைவாணி, கிருஷ்ண‌வேணி ஆகியோரையும் கொலை செய்து, அவர்களது நகைகளை திருடி சென்றதை ஆறுமுகம் ஒப்புக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்