விடுதி மேலாளர் பட்டப்பகலில் வெட்டி கொலை :கண்காணிப்பு கேமராவில் பதிவு
கர்நாடக மாநிலம் கல்புர்கி நகரில் விடுதி மேலாளரை 2 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றனர்.
கல்புர்கி நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் மேலாளராக பணியாற்றி வரும் மல்லிகார்ஜுன் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மல்லிகார்ஜூனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மல்லிகார்ஜூன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இக்கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story