"மேகதாதுவில் நாங்களே அணை கட்ட துவங்குவோம்" - கன்னட அமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் சவால்

சக்தி இருந்தால் கர்நாடகாவுக்குள் நுழைந்து மேகதாது அணையை, கேட்டுப்பாருங்கள் என, ஒருங்கிணைந்த கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் சவால் விடுத்துள்ளார்.
மேகதாதுவில் நாங்களே அணை கட்ட துவங்குவோம் - கன்னட அமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் சவால்
x
மேகதாது மற்றும் மற்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகம் செயல்பட்டு வருவதாக வாட்டாள் நாகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கண்டித்து வருகிற 12 ஆம் தேதி,  கர்நாடக தமிழக எல்லையான அத்திப்பள்ளியில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும், கர்நாடக அரசு உடனடியாக மேகதாது அணைக்கான பணிகளை தொடங்காவிட்டால், தங்களது இயக்கத்தின் சார்பில், சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அணை கட்டும் பணியை தொடங்குவோம் என்றும் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்