"அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி" - காங். தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டம்

தேர்தல் பிரசாரத்தை துவக்கினார் ராகுல்காந்தி
அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி - காங். தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டம்
x
நாடாளுமன்ற தேர்தலில் ,காங்கிரஸ் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தால், அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 
அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய அவர், அங்கு நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றினார். ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, அண்மையில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யபட்டதை ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார். வெறும் கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் நெருக்கடிக்கு தீர்வாகி விட முடியாது என்றும், நாட்டில் ஒரு புதிய பசுமைப்புரட்சியும் ஏற்பட்டாக வேண்டும் என்றும்
ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்