பெட்ரோல் போட வந்த பெண்ணை தாக்கிய இளைஞர்

சிசிடிவி காட்சிகளை வைத்து இளைஞரை தேடும் பணி
பெட்ரோல் போட வந்த பெண்ணை தாக்கிய இளைஞர்
x
பெங்களூரு பசவேஸ்வரா நகர் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் நின்று கொண்டிருந்த மஞ்சுநாத் என்பவரின் வாகனம் மீது அந்த பெண்ணின் வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணுடன் மஞ்சுநாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென அந்த பெண்ணை அடித்ததோடு, அவரை எட்டி உதைத்தார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த நபரிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் அங்கிருந்து நழுவினார். பாதிக்கப்பட்ட அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து மஞ்சுநாத்தை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்